Header Ads



"ஆசியாவின் முன்னுதாரண, தலைவராக கோட்டாபய"

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை - வீரக்கெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், வாக்களிக்காதவர்கள் கூட ஜனாதிபதியை பாராட்டுகின்றனர். சர்வதேசமும் கோட்டாபய ராஜபக்ச குறித்து மிகவும் தெளிவாக பேசி வருகின்றன.

ஆசியாவின் முன்னுதாரணமான தலைவராக கோட்டாபாய ராஜபக்ச மாறி வருகிறார்.

தனது சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை குறைத்து கொண்டு இதுவரை எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காத புகழை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

மக்களின் கஷ்டங்களை அடையாளம் கண்டு, அவர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகிறார். தேசிய உற்பத்தியை அதிகரிக்க ஜனாதிபதி வேலைகளை செய்து வருகிறார்.

இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உற்பத்தியாவதை எதிர்காலத்தில் காண முடியும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்படும்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையின்றி ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.