Header Ads



உலக சாதனை படைக்க, இலங்கை நடவடிக்கை


உலகின் மிகப்பெரிய இரட்டையர் ஒன்றுகூடலை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 2020 ஜனவரி மாதத்தில், இந்தக் கின்னஸ் சாதனையைப் படைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு, ஸ்ரீ லங்கா ட்வின்ஸ் (Sri Lanka Twins) என்று பெயரிடப்பட்டுள்ளது.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில், இந்தச் சாதனை நிகழ்வு இடமபெறவுள்ளதாக, இலங்கை இரட்டையர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

குறித்த சம்மேளனத்தின் நிறுவுனரும் தலைவியுமான உபுலி கமகேயினால், இலங்கை இரட்டையர் சம்மேளனத்தின் அழைப்பிதழ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நேற்றைய தினம் (26) கையளிக்கப்பட்டது.

இலங்கையின் 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், 28,000 இரட்டைச் சகோதர, சகோதரிகள், இந்தச் ச​ம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.