தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை, அச்சுறுத்தினாரா சபாநாயகர்..?
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை அச்சுறுத்தியதாக எழுந்த செய்தியை சபாநாயகர் முற்றிலும் நிராகரித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த வாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினரை அலுவலகத்துக்கு அழைத்து அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளியானது.
இந் நிலையிலேயே தற்போது சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த தகவலை சபாநாயகர் முற்றிலும் நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் சபாநயகரின் பெயருக்கு அப கீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான தகவல்கள் வெளியாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment