Header Ads



துவேஷம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் இப்போது அடங்கிப் போயுள்ளனர், அவர்கள் தமிழர்களை காடேற்ற முயன்றனர் - கருணா

யுத்தத்தை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு இருக்கின்றது. அதை பலர் விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி நான் கவனத்தில் எடுப்பதில்லை. ஏனெனில் கருணா போராட்டத்தில் இன்னும் இருந்திருந்தால் இங்கு ஒரு இளைஞர்களும் வந்திருக்க மாட்டார்கள். அனைவரும் போராட்டத்தில் அழிந்திருப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

அம்பாறை, பொத்துவில் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம்.

மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம் ஓடும் கப்பலிலே பயணிக்க வேண்டும் என மேடைகளில் உரக்கக் கூறினோம். அது பற்றிய தெளிவு அப்போது தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

ஜனாதிபதி கோட்டாபயவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல விடயம். நாம் வெற்றியின் பங்காளராக இருக்கும் போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள அரசிடம் வாதிடும் சக்தியாக மாறமுடியும்.

சஜித் பிரேமதாச அவருடன் இருந்தவர்கள் துவேஷம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் தமிழ் மக்களை காடேற்ற முற்பட்டனர். இனவாதம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் இருந்த இடத்திலே தமிழ் தலைமைகளும் இருந்து கொண்டு ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்கள் என்று இன்னும் எனக்கு புரியவில்லை.

இது ஒரு வரலாற்றுப் பிழை இந்த வரலாற்றுப் பிழைகளை இனிவரும் காலங்களிலும் நாம் விட்டு விடக்கூடாது.

கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகளில் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துரோகச் செயல்.

வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், காளி கோயிலை இடித்து பள்ளிவாசல் கட்டினேன் என்று திமிராகப் பேசிய முஸ்லிம் தலைவர்கள் இப்போது அடங்கிப் போய் இருக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

கடந்த ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சிக்காலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபக்கேடு. அவரை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்தவர்கள் தமிழ் மக்கள். அவர் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை மாறாக துரோகத்தை மாத்திரமே செய்தார் அவரால் ஒரு அரசியல் கைதிகள் கூட வெளியில் விட முடியவில்லை.

இன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தவுடன் அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறார்.

நான் ஏன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை உருவாக்கினேன் என்றால், எனக்கு தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நாள் உடையும். ஏனெனில் அது ஒரு ஆணித்தரமான கட்சி அல்ல. அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல, அவர்கள் பதிவு செய்யப் போவதுமில்லை. தமிழரசு கட்சியின் கீழ் தான் ஒன்றாக இருக்கின்றனர்.

அவர்களின் உடைவை நிமிர்த்த கூடிய கட்சி தேவை என்பதால்தான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கி தமிழர் எங்கெல்லாம் வசிக்கிறார்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் பயணம் செய்து கட்சியை பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு குறித்தும் தெளிவுபடுத்தி வருகிறோம்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வேறு ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும். தேசியக் கட்சியுடன் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் நாம் களம் இறங்குவோமானால் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாது.

ஏனெனில் தேசிய கட்சியில் முஸ்லிம்கள் இடம்பெற்றிருப்பார்கள். தமிழர்களின் வாக்கும் அவர்களுக்கே செல்லும் இதனால் அந்த ஆசனம் சென்றடையும் இது ஒரு ஜனநாயக மரபு.

அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறமுடியும்.

வெல்ல வைத்து தருவது உங்கள் கடமை நீங்கள் வெல்ல வைப்பவரை நான் அமைச்சராக்குவேன். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியின் தேவையை விட அம்பாறை மாவட்டத்திற்கு மிக முக்கியமானது.

இந்த பொத்துவில் மண்ணானது கஸ்ட்ரோ, டேவிட், தோமஸ், ரஞ்சன் போன்ற பல தளபதிகளை இந்த போராட்டத்திற்காக தந்தது. ரஞ்சன் என்ற மாவீரரும் நானும் ஒரே காலத்தில் பயிற்சியை பெற்றவர்கள்.

இந்த யுத்தத்தை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு இருக்கின்றது அதை பலர் விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி நான் கவனத்தில் எடுப்பதில்லை ஏனெனில் கருணா போராட்டத்தில் இன்றும் இருந்திருந்தால் இங்கு ஒரு இளைஞர்களும் வந்திருக்க மாட்டார்கள்.

அனைவரும் போராட்டத்தில் அழிந்திருப்பார்கள் இது எல்லோருக்கும் இழப்புதான் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. உலகில் பல நாடுகளின் தேர்தல்களில் மேற்கு நாடுகள் உட்பட தேசிய வாதமும்,இனவாதமும், மதவாதமும் தான் வெற்றிபெற்றிருக்கிறது. கருணாவும் சரியான புள்ளிக்கு வந்திருக்கினறார் எனத் தோன்றுகிறது. அவர் குறிப்பிடுகின்ற முஸ்லீம் தலைவர் இந்த வேலையை எப்பவோ தொடங்கி விட்டார். அவரின் பிழையான தூர நோக்கற்ற சிறுபிள்ளைத்தனமான வழிநடத்தலினாலும், பேச்சினாலும் அவருடைய கிராம மக்கள் மட்டுமன்றி முழு முஸ்லிம்களும் அசிங்கப்பட்டு நிற்கின்றனர். முஸ்லிம்கள் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மற்றசமூகத்தால் முன் வைக்கப்படும் போது உதாரணம் காட்டும் பிரதேசமாக காத்தான் குடி அமைந்திருப்பது துரதிஷ்டமானது. எனது பார்வையில் JVP தவிர்ந்த ஏனைய எல்லாக் கட்சிகளும் இனவாதம் பேசியே உயிர் வாழ்கின்றன. ஒப்பீட்டளவில் சிறுபான்மைக் கட்சித்தலைவர்களில் ஹக்கீமும், சம்பந்தனும் உணவுக்கு உப்புச் சேர்ப்பது போன்று இனவாதம் பேசக் கூடியவர்கள். அதனால் என்னவோ ஏனைய சமூகங்களில் இவர்களுக்கு அங்கீகாரம் காணப்படுகிறது.

    ReplyDelete
  2. இவன் அவனுடைய சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த கொலைக்காரன்.

    ReplyDelete
  3. இவன் கருணா ரோசம் இல்லாதவன்.இவனுடைய மூஞ்சியை சற்று உற்று நோக்கி பாருங்கள். கொலை வெறி தாண்டவம் ஆடுகிறது.
    கேடு கெட்ட இந்த நாய் தனது அரசியல் எதிரியை பெயர் குறிப்பிட்டு பேசலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் ஏன் வம்புக்கு இருக்கின்றான்.
    இவனுடைய தாய் ஒரு முஸ்லிம் ஆணால் பாதிக்கப்பட்டவளோ?

    ReplyDelete
  4. @suhaib மன நோயாளியே தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் மொக்கு தனமான கதை சொல்வதை நிறுத்தும். உம்மைப்போன்ற போலி முற்போக்கு நயவஞ்சகர்களால் தான் இவனைப்போன்ற தமிழ் பயங்கரவாதிகளெல்லாம் முஸ்லிம்களை எள்ளி நகையாடுகிறார்கள். முஸ்லிம்களெல்லாம் தவறானவர்களென்றால் அதற்குள் நீயும் இருக்கின்றாய் உன் வாப்பாவும் இருக்கின்றான் அதை நினைவில்கொள்.

    ReplyDelete
  5. கருனா எனும் கொலைகாரன் பேசும் இனவாதத்தை கேட்டும் இன்னும் தமிழ் மக்கள் அவனை அங்கிகரிக்கவில்லை காரனம்.சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்தவன்.இவனை யரரும் கணக்கில் எடுக்க தேவையில்லை.suhaib நீங்கள் கொஞ்ஞம் நிதானமாக பேசவும்.தேர்தல் நேரத்திலும்,Muslim கலின் இக்கட்டான நேரத்திலும் கருத்து பதிவிட பயந்து கானாமல் போன suhaib இப்போது மட்டும் வந்து சும்மா தேவையற்ற கருத்தை பதிவிடுவது கவலையாக உள்ளது.

    ReplyDelete
  6. Appa iwarea eatru konuvittar pirabakaranai kattikkoduthu konrawar naanthan enru

    ReplyDelete
  7. JM: அடிக்கடி கருணா சம்பந்தப்பட்ட விடயங்களை News ஆகப் போட்டு எங்களுக்கு நல்ல வேடிக்கை காட்டுங்கள். எங்களுக்கும் ரொம்ப ரொம்ப சோம்பலாக இருககின்றது. இந்த News எல்லாம் படிக்கும்போது சிரிப்பு சிரிப்பா வருகின்றது. இந்தக்காலத்து பசங்கள் எல்லாம் முதியோர்கள்கூட இப்படியான ஜோக்குகளைத்தான் ரொம்ப விரும்புகின்றார்கள். Rizard, Suhaib, Mohamed Lafir, NGK, Ghouse போன்றவரகளின் கருத்துக்களுக்காக இப்படியான செய்திகள் போட்டுவிடுவதை நிறுத்திவிட வேண்டாம். இலங்கையிலும் இப்படியான தறிகெட்ட அரசியல் பயங்கரவாதிகள் Political Jokers இருக்கின்றார்கள் என்பதனை உலகம் அறியவேண்டாமா?

    ReplyDelete
  8. உண்மை கருணா ஐயா வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  9. நல்லவேளை நீ விரும்பிய தமிழீழம் அமைந்திருந்தால் / முஸ்லிம்களையே அழித்திருப்பாய் ., உனது கெட்ட எண்ணம் தான் அந்த இயக்கத்தையே அழித்து , விட்டது

    ReplyDelete

Powered by Blogger.