Header Ads



கல்முனையில் இரத்ததான முகாம்

(எம்.என் .எம்.அப்ராஸ்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனையன்ஸ் போரமினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்த தான முகாம் நான்காவது ஆண்டாக இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இத்ற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை, 28-12-2019 கல்முனை அலியார் வீதியில் அமைந்துள்ள அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்காலை 9:00 மணி தொடக்கம் மாலை 4:00 மணி வரை இரத்த தான முகாம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெண்களும் கலந்துகொள்ள பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இதில்
குருதி நன்கொடை வழங்கும் நன்கொடையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள ஏற்ப்பாட்டுக்குழுவினர் வேண்டுகின்றனர்

மேலதிக விபரங்களுக்கு கல்முனையன்ஸ் போரம் 0777849423 | 0773815005 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் .


No comments

Powered by Blogger.