Header Ads



மைத்திரியும் - ரணிலும் அழைப்பை உதாசீனம் செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் பற்றி வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் பற்றிய வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.

இதன்போது மன்றில் முன்னிலையாகிய குற்றப்புலனாய்வுப் அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் விசாரணை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக கூறியிருந்தார்.

எனினும், குறித்த இருவரும் விசாரணைகளுக்கு முன்நிலையாகவில்லை என்றும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனை கவனத்திற்கொண்ட நீதவான் பிரியந்த லியானகே, உடனடியாக அவர்கள் இருவருக்குமான நோட்டிஸ் அறிவிப்பை விடுக்கும்படி உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த அழைப்பை அவர்கள் உதாசீனம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் நீதிமன்றம் விடுத்திருக்கிறது.

1 comment:

  1. அவர்கள் ஆட்சியில் இவர்களின் ஆட்டம் இவர்கள் ஆட்சியில் அவர்களுக்கு முடியாது பாருங்க

    ReplyDelete

Powered by Blogger.