Header Ads



ஜனாதிபதியின் ஆலோசகர் கூறிக்கொண்டு, பாடசாலை அதிபரை அச்சுறுத்திய நபர் கைது

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஸ்ரீயானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற அந்நபர் 11/9, புனித செபஸ்டியான் மாவத்தை மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்தவராவார். 

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இந்த நபரை நாளைய தினம் மொரட்டுவை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 


மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019-12-27

No comments

Powered by Blogger.