Header Ads



உம்றா மார்க்கக் கடமை முடித்துவிட்டு நாடு திரும்பி, உறவினர்களைப் பார்க்கச் சென்றவர் வழியில் விபத்தில் சிக்கி மரணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

உம்றா எனும் மார்க்கக் கடமையை மக்கா சென்று முடித்து விட்டு நாடு திரும்பியிருந்த நிலையில் உறவினர்களைப் பார்க்கச் சென்ற யாத்ரீகர் செல்லும் வழியிலேயே வீதி விபத்திச் சிக்கி மரணமடைந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவு சந்திவெளியில் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்த அண்ணல் நகர், கிண்ணியாவை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் மஹ்ரூப் (வயது 60)  என்பவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் சனிக்கிழமை 27.12.2019 உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இவர் கிண்ணியாவிலிருந்து சாய்ந்தமருதிலுள்ள தனது மகளைப் பார்க்கச் செல்லும் வழியில் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளியில் இந்த விபத்தைச் சந்திக்க நேரிட்டது.

அவரே செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நிறுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து பஸ்ஸின் பின்புறமாகச் சென்று மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த முச்சக்கரவண்டியில் அவருடன் கூடச் சென்ற உறவினர்களில் ஒரு பெண் கால் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

முச்சக்கரவண்டியில் கூடவே பயணித்த விபத்தில் சிக்கி மரணித்தவரின்  மனைவி, மனைவியின் தங்கையின் 4 வயதான குழந்தை ஆகியோரும் சிறு காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.