Header Ads



6 மாதத்துக்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்

 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் தகுதியைப் பெற்றுள்ள மாணவர்களை ஆறுமாதகாலத்திற்குள் பல்கலைக்கழங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமென தகவல் தொலைத்தொடர்பு, உயர்கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருந்த சந்தர்ப்பங்களில் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர்தான் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் நடைமுறை காணப்பட்டது. 

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம் ஆறுமாதகாலத்திற்குள் பல்கலைக்கழக அனுமதிகள் வழங்கப்படும். இதன்மூலம் மாணவர்களின் ஒருவருடகாலம் வீண் விரயமாவது தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.