Header Ads



மூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன

திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர், சம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் (08), இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டைப்பறிச்சான் தெற்கு, இறால்குழி, மகிழ்ச்சேனை பகுதிகளைச் சேர்ந்த இந்த நால்வரும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து இரண்டு உந்துருளிகளும் மீட்கப்பட்டன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, ரி-56 துப்பாக்கி ஒன்று, மகசின்கள் இரண்டு, ரவைகள் 61, கிளைமோர் ஒன்று, கைக்குண்டுகள் மூன்று, டெட்டனேற்றர்கள் மூன்று, 9 மி.மீ ரவைகள் 3 1 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் நால்வரும், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

10 comments:

  1. kullanari ajanai yen innum kaithu seiyyavillai

    ReplyDelete
  2. இன்னும் ஆயிரக்கனக்கான பயங்கரவாதிகள் இருக்கலாம்.

    ReplyDelete
  3. இன்னும் சிறிது காலத்தில் இந்த பயங்கரவாதிகளை அரசியல் கைதிகள் என்று கூறி தமிழ் பிரிவினைவாத தீவிரவாதிகள் விடுதலைசெய்ய சொல்வார்கள்

    ReplyDelete
  4. Rehabilitation and resettlement is important

    ReplyDelete
  5. அஜன் என்ற பாசிசப் புலியும் என்றோ ஒருநாள் கைதுசெய்யப்படுவான்.
    இவன் இத்தளத்தைப் பயன்படுத்தி தமிழர்களை புனிதர்கள் என்றும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும் கருத்தேற்றம் செய்து மக்களை பிழையாக வழிநடத்துகின்றான்.
    இந்த பாசிச புலிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திவிட்டு அதனை முஸ்லிம்களின் பக்கம் கையை நீட்டி குற்றம் சாட்ட முற்படுவர்.
    எனவே இந்த காட்டுமிராண்டிகள் தொடர்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
    புலனாய்வு துறைக்கு தேவையான பூரண ஆதரவை முஸ்லிம்கள் வழங்கி இப்பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை முடக்க வேண்டும்.

    ReplyDelete
  6. சோனகர்க்ள் மனப்பால் குடிக்க வேண்டாம் உங்கள் பருப்பு இனிமேல் வேகாது.

    ReplyDelete
  7. கருணா என்ற புலி இந்த புலிகளை வழிநடத்துகிறது.

    ReplyDelete
  8. @பகுத்தறிவாளன் எங்களுடைய பருப்பை நாங்கள் வேகவைத்துக்கொள்கின்றோம். ஆனால் சத்தமில்லாமல் நாட்டை துண்டாக்க நினைக்கும் தமிழ் பயங்கரவாதிகளை சிங்களவர்கள் அவதானித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சினையை கிளறிவிட்டு தனி நாடு பயங்கரவாதத்தை மீண்டும் அரங்கேற்றினால் மிச்சமாக இருக்கும் எச்சை புலிகளும் கூண்டோடு அழிக்கபடுவீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.