3 ஆவது முறையாகவும் ராஜித, முன்பிணை கோரி மனுத்தாக்கல்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்ட ´வௌ்ளை வேன்´ ஊடக சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இரகசிய பொலிஸின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரின் வாக்குமூலத்திற்கு அமைய தன்னை கைது செய்ய இரகசிய பொலிஸார் தயாராவதாக குறித்த முன் பிணை கோரிய மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இதனை மேற்கொள்ள தயாராவதாக சுட்டிக்காட்டிய அவர் அவ்வாறு கைது செய்வதற்கு முன்னர் தன்னை முன்பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதேவேளை, ராஜித சேனாரத்ன இதற்கு முன்னர் தாக்கல் செய்த முன்பிணை கோரிய இரு மனுக்களை கொழும்பு நீதவான் நீதிமன்றினால் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்ல யோசனை நடைமுறைக்கு வந்தால் சிறப்பு.
ReplyDelete