Header Ads



சோற்றுப்பானை மீது வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு - யாழ்ப்பாணத்தில் சம்பவம்


அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாழ். மனியம் தோட்டத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி(வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். மனியம் தோட்டத்தில் வசித்து வரும் குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாய் கடந்த 23 ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அருகில் குழந்தையும் இருந்துள்ளது.இதன்போது குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது.இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழந்துள்ளது.

இதனால் குழந்தையின் உடம்பு முழுவதும் சூடு காயம் ஏற்பட்ட நிலையில் காயமடைந்த குழந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

No comments

Powered by Blogger.