Header Ads



மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் 25 பாடசாலைகளை அமைக்க தீர்மானம்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 25 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகளை அமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஹோமாகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, அமைச்சர் இதனை தெரிவித்தார். 

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது ஸ்தாபிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் கல்வி நிலை மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். 

இதன் காரணமாக இந்த நிலைமையை மேலும் மேம்படுத்தும் வகையில் தமது அமைச்சு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. இந்த நாட்டு மக்களின் கல்வித் தரத்தை மேன்படுத்த தனிநபர்களின் பெயர்கள் முக்கியமல்ல. வெறுமனே தனக்குக் கிடைத்த பதவியை வைத்து குறுகிய அரசியல் இலாபத்தை பொதுமக்கள் மத்தியில் திணிப்பது கல்வித்துறைக்குச் செய்யும் சேவையல்ல.அதுதான் இனவாதம்.

    ReplyDelete
  2. THIS FOOL BANDULA WAS DREAMING TO BECOME FINANCE MINISTER.BUT GOT SOME USELESS POST WHERE HE CAN NOT MAKE BIG MONEY.IF HE CAN BUILD 25 NEW SCHOOLS HE CAN GET 25 MILLION COMMISSION.GOOD IDIA.

    ReplyDelete

Powered by Blogger.