Header Ads



முன்னாள் ஜனாதிபதி செயலனி பிரதானி மஹனாமவுக்கு 20 ஆண்டு, பி.திசாநாயக்கவுக்கு 12 ஆண்டு கடூழிய சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலனி பிரதானி எல்.கே மஹனாமவுக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும், 65,000 ரூபா அபரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரக்கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்கவுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 55,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது இன்றைய தினம் நிரந்தர நீதாய நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் கந்தளாய் பகுதியில் சக்கரை தொழிற்சாலைக்கு சொந்தமான இயந்திர உபகரணங்களை இடமாற்றுவதற்காக இந்திய தொழிலாதிபரிடமிருந்து 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்டவேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.