Header Ads



UNP யின் தலைமையில் மாற்றம் வேண்டும், ரணிலின் கீழ் அரசியல்செய்ய தயாராக இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். 

தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழும் அதன் உறுப்பினர்களுடனும் தான் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்து பதவி நிலைகளிலும் உள்ளவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர் நளீன் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.