Header Ads



கோத்தாபயதான் கிறிஸ் மனிதனை அனுப்பினார் - யோகேஸ்வரன் Mp

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபா ராஜபக்சவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகளாக இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்தில் இன்று -07- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிள்ளையான் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர். வெலிக்கந்தைப் பகுதியில் பல இடங்களைத் தோண்டினால் தெரியும். கருணா அம்மான் பிள்ளைகளைப் பிடித்து அடித்து இன்றும் பல பொதுமக்களின் வயல் காணிகளை சுவீகரித்து தமது சொந்த சொத்தாக பயன்படுத்துகின்றார்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பல விடயங்களை ஆராய்ந்து தீர்மானித்ததன் பொருட்டு குறித்த தீர்மானத்தை எடுத்தோம்.

கடந்த காலத்தில் கோத்தபாய தமிழின அழிப்புக்கு முக்கியஸ்தராக இருந்தவர். மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது செயலாளராக இருந்து யுத்தத்திற்கு கட்டளை பிறப்பித்தார். ஆனால், தற்போது தான் ஒருபோதும் கட்டளை பிறப்பிக்கவில்லையெனத் தெரிவிக்கின்றார்.

கடந்த இரண்டு தேர்தலிலும் அன்னச் சின்னத்திற்கே தமிழ் மக்கள் வாக்களித்தனர். அதில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. தற்போதும் அன்னச் சின்னம் வந்திருக்கின்றது.

கடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ் மக்களிடையே ஆதரவு இல்லை கோத்தபாய ஜனாதிபதியாக வரமாட்டார்.

தற்போது அவருடன் சேர்ந்திருக்கும் கூட்டம் பிள்ளையான் கட்சி, கருணா அம்மான், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு மக்களை அனுப்பி தற்போதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரினால் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் அமைப்பாளர்கள் என பலர் இணைந்திருக்கின்றார்கள்.

அவர்கள் கடந்த காலத்தில் கொள்ளை, கொலை, கப்பம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிவரும்.

இவர் ஜனாதிபதி செயலாளராக இருந்த போது கிறிஸ் மனிதனை அனுப்பினார். அவர் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் நிலமை என்னவாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் கருணாவைப் பிரித்து போராட்டத்தை கொச்சைப்படுத்திய நிலைமை அது. தற்போதும் சுய நலத்தில் போராட்டம் செய்கின்றார். இரண்டு தடவை பிரதி அமைச்சராக இருந்து தனக்கு சொத்து சேர்த்தவர் தான் கருணா.

இன்று சஜித் வந்தால் தமிழ் முஸ்லிம் பிளவு ஏற்படும் என பேசுகின்றார். ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்யமாட்டார் சஜித். முஸ்லிம்களைச் சேர்த்து கிழக்கு மாகாண சபையை உருவாக்கியவர் மஹிந்த.

கிழக்கு மாகாண சபையையும் முஸ்லிம்களுக்கு கொடுத்தவர்கள். ஆனால், பிள்ளையானை ஏன் முதலமைச்சராக ஏற்கவில்லை. யாருக்கு காது குத்துகின்றீர்கள். இனவாதக் கருத்துகளைப் பேசிக்கொண்டு திரிகின்றார்கள்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் முஸ்லிம்களுக்கு வழங்கி விட்டு பிள்ளையானை புரம் தள்ளி வைத்தவர் தான் மகிந்த ராஜபக்ஷ. தேர்தல் வதந்திக்காக மக்களிடையே ஏமாற்றுக் கருத்துக்களைப் பேசி வருகின்றனர்.

எனவே தமிழ் மக்கள் அன்னம் சின்னத்துக்கு வாக்களியுங்கள். தமிழரசு கட்சி எடுத்த முடிவுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் ஏனைய கட்சியுடன் சேர்ந்து பேசிய பிற்பாடு இரா.சம்பந்தன் ஐயா முடிவை வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கிரீஸ் மனிதனை மட்டுமல்ல பேருவல கலவரம் , கின்தோட்ட கலவரம், திகன, அம்பாரை கலவரங்கள் , ஏப்ரல் குண்டுவெடிப்பு , மினுவாங்கொட தாக்குதல் அனைத்தையும் அரங்கேற்றியது இந்த ராஜபக்ச குடும்பம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.