Header Ads



வாக்காளர்களே குழம்பாதீர்கள் - பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூலின் விளக்கம் இதோ..!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம்  ஒரு  மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள  நிலையில்,  தற்போது  விநியோகிக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் வாக்களிக்கும் நேரம் 7  மணிமுதல் 4 மணிவரை என  குறிப்பிடப்பட்டுள்ளதால் வாக்காளர்  மத்தியில்  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இது குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன  ஜீவன் ஹூலிடம்  தொடர்பு  கொண்டு  கேட்ட  போது,  தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள  வாக்குச்சீட்டுகள்  ஏற்கனவே அச்சிடப்பட்டவை ஆகும்.  

அந்த வாக்குச்சீட்டுகளில்  காலை 7 மணிமுதல்  4  மணிவரையே வாக்களிக்க  முடியும்  என  குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  ஆனால்  ,  தேர்தலின்  வாக்களிக்கும் நேரம் 1 மணித்தியாலத்தால்  அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.  

இதற்கான  விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்த  மானியில் காலை 7 மணிமுதல்  மாலை 5 மணிவரை  வாக்களிக்கலாம் என  குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதனால் வாக்காளர்கள்  குழப்பமடைய  தேவையில்லை. காலை 7 மணிமுதல்  மாலை 5 மணிவரை வாக்களிக்க முடியும். இதில்  எந்த  மாற்றமும்  இல்லை என்றார். 

No comments

Powered by Blogger.