Header Ads



சஜித் ஜனாதிபதியானால், சம்பிக்க பிரதமர் இல்லை - திட்டவட்டமாக சொல்கிறார் இம்தியாஸ்

- Anzir -

சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானால், சம்பிக்க ரணவக்க பிரதமராக நியமிக்கப்படுவாரென பரப்பப்படும் செய்திகளை தான் மிகப்பொறுப்புடன் மறுப்பதாக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் Jaffna Muslim இணையத்திற்கு மேலும் தெரிவித்ததாவது,,

சஜித் பிரேமதாசாவுக்கு, முஸ்லிம்களிடமிருந்து கிடைக்கவுள்ள வாக்குகளை தடுத்து நிறுத்துவதற்காக பல பொய்யான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டு பரவச் செய்யப்படுகிறது.

இவ்வாறான செய்திகளில் ஒன்றுதான், சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானால் சம்பிக்க ரணவக்க பிரதமராக நியமிக்கப்படுவார் என்பதாகும்.

சஜித் பிரேமதாசா இப்படி ஒருபோதும், எங்கேயும், எப்போதும் சொல்லவேயில்லை.  அவர் சொல்லாத ஒன்றை சில ஊடகங்கள் இட்டுக்கட்டியுள்ளன.

சஜித் பிரேமதாசாவுடன் நெருக்கமானவன் என்ற வகையிலும், அவரது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் குழுவில் உள்ளவன் என்ற வகையிலும், மிகவும் பொறுப்புடன் நான் கூறவிரும்புவது என்னவென்றால், சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானால் சம்பிக்க ரணவக்க ஒருபோதும் பிரதமராக நியமிக்கப்பட மாட்டார் என்பதாகும்.

ஆகவே, நாட்டு முஸ்லிம்கள் இதுபோன்ற போலியான ஆதாரமற்ற செய்திகளை நம்பக்கூடாது என்பதுடன், அவற்றை ஒதுக்கித்தள்ளவும் வேண்டுமெனவும் இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. If this guy is so close to Sajid as he claims, he should get Sajid to deny this rumour.

    ReplyDelete
  2. இவர் யார் இதை சொல்ல

    ReplyDelete
  3. INDA SHEITHI UNMAI ENRIRUNDAL DAHIRIAM IRUNDAAL,EN
    SAJITHUKKU WAAI THIRANDU SHOLLAMUDIATHU.PENGALUKKU
    MAATHAVIDAI TOWEL KODUPPAIN
    ENRU MAYDAIKALIL SHONNATHUPOL
    SHOLLATTUMAY.

    SHOLLAWAY MAATTAAN.

    ReplyDelete

Powered by Blogger.