Header Ads



விஜேதாச ராஜபக்ஸவே மஹிந்த அரசாங்கத்தில் ஊழல் புரிந்தவர்களை சிறைப்படுத்தாமல் பாதுகாத்தார்

நீதி அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்ஸவே மஹிந்த அரசாங்கத்தில் ஊழல் புரிந்தவர்களை சிறைப்படுத்த விடாமல் பாதுகாத்து வைத்திருந்ததாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

விஜேதாச ராஜபக்ஸ நீதி அமைச்சராக இருந்தபோது ஊழல் பேர்வழிகள் பலருடைய ஆவணங்களை தம்மிடம் வைத்துக் கொண்டு வெளிவராதவாறு தடுத்துக் கொண்டிருந்ததார்.

முன்னாள் அமைச்சர் விஜேதாசவுடன் கூட்டாக ஒரு குழு அரசாங்கத்துக்குள் ராஜபக்ஸாக்களைக் காப்பாற்றுவதற்காக செயற்பட்டடுள்ளது.

இந்த நிலைமை சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஏற்படாது என்றார்.

5 comments:

  1. அப்போ நாலு வருடங்களாக நீங்கள் அனைவரும் பிரதமர் உட்பட தூங்கிக் கொண்டா இருந்தீர்கல்.விஜதாச ராஜபக்ச இப்போ அந்தப் பக்கம் போனதும் இவ்வாறு பேசுகிரீர்கல்.அவர் இப்போது வரை உங்கலுடன் இருந்தால் இப்படி நீங்கள் அவர் மீது குற்றாசாட்டு சுமத்த போவதில்லை.

    ReplyDelete
  2. இனவாதத்தின் தந்தையே உங்கள் நடிப்பு மிகவும் பிரமாதம்
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete
  3. Unmayhal iwwaruthaan weli warum ..purinthukondaal wetry...
    Innum nerayya waranum....warum ...bt poy illay..

    ReplyDelete

Powered by Blogger.