Header Ads



சஜித்தின் சகோதரி, பாயிஸ் சந்திப்பு - ஆதரவும் கோரினார்

ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் சகோதரியான திருமதி. துலாஞ்சலி பிரேமதாச அவர்கள் இன்று நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்களை நகர சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 
ஜனாதிபதி வேற்பாளரான தனது சகோதரனுக்கு ஆதரவு தரும்படி அவர் கோரியதுடன், புத்தளம் அருவக்காளு குப்பை பிரச்சினை சம்பந்தமாக தீர்க்கமான முடிவு ஒன்றை தேர்தல் வெற்றியின் பின்பு அவர் நிச்சயமாக பெற்றுதருவதாகவும் உறுதியளித்தார்.
இச் சந்திப்பில் கிளீன் புத்தளம் அமைப்பின் மகளிர் அமைப்பினரும், நகர பிதாவுடன் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுடன் நேரடியாக சந்தித்து கலந்துரையாட நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.