Header Ads



முஸ்லிம் ஆளு­ந­ரையோ, முத­ல­மைச்­ச­ரையோ ஏற்க முடி­யாது - கிழக்கு தமிழரின் கீழ் இருக்க வேண்டும் - கருணா

கிழக்கு மாகா­ணத்­திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளு­ந­ரையோ, முத­ல­மைச்­ச­ரையோ எம்மால் ஏற்க முடி­யாது என்று தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமிழ் தலை­மைத்­து­வத்தின் கீழ் கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கிரு­லப்­ப­னையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார். மேலும் கருத்து தெரி­வித்த அவர்.

ஐ.தே.க அர­சாங்கம் மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் தலை­மைத்­துவம் ஒன்றே மேலோங்கும். இந்த இடத்தில் தமிழ் மக்கள் சிந்­தித்து செயல் பட வேண்டும்.  பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்­ ஷவை வெற்றி பெற வைக்கும் போதே தமிழ் மக்­களின் இருப்பை தக்­க­வைத்து கொள்ள முடியும். தமிழ் மக்­களை கோத்­தா­பய முற்­று­மு­ழு­தாக நம்­பி­யுள்ளார். யுத்தம் முடி­வ­டைந்த காலத்தில் இருந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூலம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என பல செயற்­திட்­டங்கள் மூலம் பாரிய அபி­வி­ருத்­திகள் செய்­யப்­பட்­டன.

முஸ்லிம் தலை­வர்­களை புறம் தள்ளும் நோக்கில் எதையும் நான் குறிப்­பி­ட­வில்லை. எனது அர­சியல் சாணக்­கி­யத்தை  மட்­டுமே இங்கு தெரி­விக்­கிறேன். தலைமைப் பொறுப்பு தமிழ் தலை­வர்­க­ளிடம் இருக்க வேண்டும்.  ஏனென்றால் தாங்கள் மட்­டுமே கிழக்கு மாகா­ணத்தின் ஆளு­நர்­க­ளாக இருக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைவர்கள் திட்டவட்டமாக இருக்கின்றனர். முஸ்லிம் தலைவர்களின் எதிரொலிப்புகளே இனத்துவேசமாக மாற்றமடைந்துள்ளது. தலைமை தாங்கும் சக்தி தமிழ் தலைவர்களுக்கு வர வேண்டும் என்றார்.-Vidivelli

7 comments:

  1. நீர் இவ்வாறு அடிக்கடி பேசி கிழக்கில் ஒற்றுமையாக வாழும் எல்லா இன மக்களுக்குல்லும் பிரச்சினையியும்,பிளவையும் உண்டாக்குவதுதான் உனது நோக்கம் என்பதை அனைத்து கிழக்கு மக்களும் நண்றாக புரிந்து வைத்துல்லார்கல்.எனவே உனது இனவாத,மதவாத பேச்சு மக்கள் முன் எடுபடாது.ஏனெனில் தமிழ் மக்களுக்கு முதலில் நீர் ஓர் துரோகி சொகுசு வாழ்க்கைக்காக தன் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அழித்தவன்.

    ReplyDelete
  2. மனிதன் எங்கேயோ போய் விட்டான். இவர் போறாருமில்ல. மற்றவர் போக விடுராருமில்ல.

    ReplyDelete
  3. உன்ன அப்போதே புலிகள் கொன்று இருக்கணும்
    மிஸ் பண்ணிட்டாங்க

    ReplyDelete
  4. எங்களுக்கு தமிழருக்கு கீழா முஸ்லிமுக்கு கீழா என்பதல்ல பிரச்சினை கிழக்கு கேவலம் கெட்ட கருனாவின் கீழோ அவனது அடிவருடிகளான இதில் இனவாதம் பேசும் அஜன் பேன்ற ஒருவனின் கீழ் இல்லாமல் எவ்வளவோ நியாமான தமிழ் உறவுகள் உள்ளன அவைகள் வந்தால் வாழ்த்தி வழிவிடுவோம்

    ReplyDelete
  5. இம்முறை சஜித் வெற்றிபெற்றால் முஸ்லீம் தலைமகள் இந்த கூட்டிக்கொடுத்த பொறுக்கியை கைது செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவனை வெளியில் விட்டுவைப்பது ஆபத்தானது. சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சு கிடைத்தால் இவன் கதை முடியும்

    ReplyDelete
  6. @NGK, அது சரி...இவ்வளவு நாளா யாரு ஆட்சி.. என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க..?

    ஆனால்...., கோத்தா வென்றால், கிழக்கின் அடுத்த கவர்னர் நிச்சயம் கருனா தான். ....

    ReplyDelete

Powered by Blogger.