முஸ்லிம் ஆளுநரையோ, முதலமைச்சரையோ ஏற்க முடியாது - கிழக்கு தமிழரின் கீழ் இருக்க வேண்டும் - கருணா
கிழக்கு மாகாணத்திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளுநரையோ, முதலமைச்சரையோ எம்மால் ஏற்க முடியாது என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழ் தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்.
ஐ.தே.க அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் தலைமைத்துவம் ஒன்றே மேலோங்கும். இந்த இடத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல் பட வேண்டும். பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை வெற்றி பெற வைக்கும் போதே தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்து கொள்ள முடியும். தமிழ் மக்களை கோத்தாபய முற்றுமுழுதாக நம்பியுள்ளார். யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூலம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என பல செயற்திட்டங்கள் மூலம் பாரிய அபிவிருத்திகள் செய்யப்பட்டன.
முஸ்லிம் தலைவர்களை புறம் தள்ளும் நோக்கில் எதையும் நான் குறிப்பிடவில்லை. எனது அரசியல் சாணக்கியத்தை மட்டுமே இங்கு தெரிவிக்கிறேன். தலைமைப் பொறுப்பு தமிழ் தலைவர்களிடம் இருக்க வேண்டும். ஏனென்றால் தாங்கள் மட்டுமே கிழக்கு மாகாணத்தின் ஆளுநர்களாக இருக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைவர்கள் திட்டவட்டமாக இருக்கின்றனர். முஸ்லிம் தலைவர்களின் எதிரொலிப்புகளே இனத்துவேசமாக மாற்றமடைந்துள்ளது. தலைமை தாங்கும் சக்தி தமிழ் தலைவர்களுக்கு வர வேண்டும் என்றார்.-Vidivelli
நீர் இவ்வாறு அடிக்கடி பேசி கிழக்கில் ஒற்றுமையாக வாழும் எல்லா இன மக்களுக்குல்லும் பிரச்சினையியும்,பிளவையும் உண்டாக்குவதுதான் உனது நோக்கம் என்பதை அனைத்து கிழக்கு மக்களும் நண்றாக புரிந்து வைத்துல்லார்கல்.எனவே உனது இனவாத,மதவாத பேச்சு மக்கள் முன் எடுபடாது.ஏனெனில் தமிழ் மக்களுக்கு முதலில் நீர் ஓர் துரோகி சொகுசு வாழ்க்கைக்காக தன் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அழித்தவன்.
ReplyDeleteமனிதன் எங்கேயோ போய் விட்டான். இவர் போறாருமில்ல. மற்றவர் போக விடுராருமில்ல.
ReplyDeleteஉன்ன அப்போதே புலிகள் கொன்று இருக்கணும்
ReplyDeleteமிஸ் பண்ணிட்டாங்க
True
ReplyDeleteஎங்களுக்கு தமிழருக்கு கீழா முஸ்லிமுக்கு கீழா என்பதல்ல பிரச்சினை கிழக்கு கேவலம் கெட்ட கருனாவின் கீழோ அவனது அடிவருடிகளான இதில் இனவாதம் பேசும் அஜன் பேன்ற ஒருவனின் கீழ் இல்லாமல் எவ்வளவோ நியாமான தமிழ் உறவுகள் உள்ளன அவைகள் வந்தால் வாழ்த்தி வழிவிடுவோம்
ReplyDeleteஇம்முறை சஜித் வெற்றிபெற்றால் முஸ்லீம் தலைமகள் இந்த கூட்டிக்கொடுத்த பொறுக்கியை கைது செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவனை வெளியில் விட்டுவைப்பது ஆபத்தானது. சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சு கிடைத்தால் இவன் கதை முடியும்
ReplyDelete@NGK, அது சரி...இவ்வளவு நாளா யாரு ஆட்சி.. என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க..?
ReplyDeleteஆனால்...., கோத்தா வென்றால், கிழக்கின் அடுத்த கவர்னர் நிச்சயம் கருனா தான். ....