ஜனாதிபதி செயலகத்துக்கு முன், சிவாஜிலிங்கம் போராட்டம்
காணாமல் போனார் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துகு்கு முன்பாக தனது போராட்டத்தை இன்று (06) முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்துள்ளார்.
தொடர்ச்சியாக அவர், அலரி மாளிகைக்கு முன்பாக இன்று பிற்பகல் தனது போராட்டத்தைத் தொடர்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment