Header Ads



கொழும்பிலிருந்து வரும் குப்பைகளை நிறுத்தாவிட்டால், நான் எவருக்கும் ஆதரவளிக்கமாட்டேன் - பாயிஸ்

இன்று -03- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீமின் பணிப்பிற்கிணங்க, கூட்டப்பட்ட புத்தளம் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சஜித்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜப்தீனிடம்,

*"கொழும்பிலிருந்து வரும் குப்பைகளை நிறுத்தாத பட்சத்தில் நான் எவருக்கும் ஆதரவளிக்கவோ பிரச்சாரம் செய்யவோ போவதில்லை, செயலாளர் இது சமந்தமாக என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் என் நகர சபை உறுப்புரிமையை பறித்துவிடுவதாகவும் கூறினார். எது நடந்தாலும் , என் பதவியே பறிபோனாலும் இந்த குப்பை விடயத்தில் ஓர் உறுதிப்பாடின்றி நாம் எவருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை"*

என திட்டவட்டமாக நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெறிவித்தார்

SM Isham Marikar 

1 comment:

Powered by Blogger.