Header Ads



மிளகாய்த் தூள் தாக்குதல் நடத்தி, தப்பிக்கமுயன்ற மரண தண்டனைக் கைதி

கொழும்பு பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக் கைதி ஒருவர் தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனைக்கு குறித்தக் கைதி அழைத்து வரப்பட்டிருந்தபோது, சிறைச்சாலை பொலிஸார் மீது மிளகாய்த் தூள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு குறித்த கைதி தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இரண்டு கொலைக் குற்றங்களுக்காக குறித்தக் கைதி மரண தண்டனை விதிக்கப்பட்டு, மகர சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும் தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.