Header Ads



சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பில் பூரண விசாரணை - பிரதமர் மகிந்த தெரிவிப்பு

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் பூரண விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள கண்காணிப்பு கமரா கட்சிகளைப் பரிசோதித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளதாகவும் தூதுவரையும் அவரின் உதவியாளரையும் பொலிஸ் மா அதிபரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தாம் நேற்று சந்தித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா செல்ல தயாராகும்போது வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த தமிழ் பெயர்கள் அகற்றப்பட்டிருந்ததாகவும் அச்செயலுக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


3 comments:

  1. விசாரணை முடிவில் சந்தேக நபர்களிடம் அதுபற்றிய எந்த தவறுகளும் காணப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இத்துடன் விசாரணை முடிவுற்றது.இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுவிஸ் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது.

    ReplyDelete
  2. "நாய் வாலை நிமிர்த்த முடியாது" என்னும் முதுமொழி பொய்யாகுமா என்ன. கடத்தல் நாடகம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. Just Started the White VAN Culture.
    கடைகளில் இப்போது PadLock இன் விலைகள் அதிகரித்து விட்டதாக தகவல் ஏனெனில் மீடியாகாரர்கள் முண்டியடித்துக்கொண்டு தங்கள் வாய்களுக்கு பூட்டு போடுகிறார்களாம்.

    ReplyDelete
  3. Investigation after investigation, reports and files gathering dust. Punch the baby in the stomach and rock the cradle at the same time.

    ReplyDelete

Powered by Blogger.