தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசியல் கட்சிகளின், பிரதிநிதிகள் நடத்திய இறுதிக் கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் நடத்தும் இறுதி கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.
இந்த கலந்துரையாடலில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினது பிரதநிதிகளும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் மேலும் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை வேட்பாளர்கள் உள்ளிட்ட அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சியினர் செயற்பட வேண்டிய விதம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அதன் பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் உள்வாங்கும் உறுப்பினர்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று (13) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது அமைதிக்கான காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment