Header Ads



தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத, போலி விடயங்களை பேசி வருகின்றனர் -

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாததும் போலியானதுமான விடயங்கள் குறித்து பேசி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின்  போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வகையிலே அவர்கள் இந்த விடயங்களை பயன்படுத்துகின்றனர்.

அவர்களுக்கு முதலில் வழங்கக் கூடிய விடயங்கள் சம்பந்தமாக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

தமிழ் மற்று முஸ்லிம் மக்கள், இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வாழ்வதற்கான வாய்ப்பினை உருவாக்குவது அவர்களுக்கு முதலில் செய்யப்பட வேண்டிய விடயமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.