Header Ads



தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் தாக்குதல் - விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என்கிறது நிர்வாகம்

(எம்.எப்.எம்.பஸீர்)

காலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.  குறித்த பள்­ளி­வா­சல் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வாசல்­  யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில்,  காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இந்நிலையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலைவரை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அ­டை­யாளம் காணப்பட்­டி­ருக்­க­வில்லை.  எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள்  தெரி­வித்­துள்­ளன.

No comments

Powered by Blogger.