Header Ads



மைத்திரியை பாராளுமன்றம் கொண்டுவருவதற்காக, என்னை நீக்கினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு இடம்பெற்றால் அதற்கெதிராக சட்ட ரீதியிலாக நடவடிக்கை எடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். பெளசி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவே,  எனக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சி மத்தியகுழு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

1 comment:

  1. சாகப் போகும் வயதில் வீட்டுக்குத் தொலையாமல் வேறு வீணாப் போன, நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எந்தப் பயனுமற்ற இந்த சைத்தானுக்கு வக்காளத்து வாங்க என்ன இந்த ஆளுக்கு மென்டலா?

    ReplyDelete

Powered by Blogger.