Header Ads



இம்முறை ஜனாதிபதித் தேர்தல் குறித்து, வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்


நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் தொடர்பில் இன்று பெப்ரல் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 4 கொலை சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

எனினும், இம்முறை அவ்வாறு கொலை சம்பவங்களோ அல்லது பாரிய வன்முறைகளோ பதிவாகவில்லை.

கொலை, கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தல், தாக்குதல், கடத்தல், குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல், சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் அரசியல் கட்சி, காரியாலயங்களை சேதப்படுத்தல் போன்ற பாரிய வன்முறை சம்பவங்கள் இம்முறை குறைவடைந்துள்ளன.

மேற்கூறிய குற்றங்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் 2010ஆம் ஆண்டில் 502 , 2015ஆம் ஆண்டில் 190, இவ்வருடம் 68 என்பன பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.