Header Ads



உற்சாகமான நிலையில் சஜித்

- Anzir -

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கூட இருந்தவர்களின் துரோகம்,  பல்வேறு பழிசுமத்தல்களினால் அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலையிலிருந்த சஜித் பிரேமதாசா மீண்டும் உற்சாகமடைந்திருப்பதாக அறிய வருகிறது. 

குறிப்பாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக இருந்த சிலர், சஜித்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர்.

தமது ஆதரவையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதற்கு, ரணில்  உடன்பட்டுள்ள நிலையிலுமே சஜித் பிரேமதாசா உற்சாகமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.