புதிய ஜனாதிபதியிடம், மஹிந்த தேசப்பிரிய விடுத்த வேண்டுகோள்
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, புதிய ஜனாதிபதியிடம் இறுதியாக ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் மறைந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு புதிய ஜனாதிபதியிடம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தற்பொழுது தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதன் பின்னர் இறுதியாக இந்த வேண்டுகோளை அவர் விடுத்துக் கொண்டார்.
Post a Comment