Header Ads



தாமரை கோபுரத்திற்கு, ஏற்பட்டுள்ள பரிதாபம்

ஆசியாவின் அதிசயமான தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் வைபவ ரீதியாக திறக்கப்பட்ட தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த தாமரை கோபுரத்தை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் ஜயதிலக கருத்து வெளியிடுகையில்,

தாமரை கோபுரத்தில் முப்படையினரின் செயற்பாடுகள் தற்காலிக நடவடிக்கையே. தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக அனுமதிக்கக்கூடிய இறுதித்தினம் தொடர்பில் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

தாமரை கோபுரத்தை வணிக மையமாக்குவதற்கும் அதன் நிதி நடவடிக்கைகளை கையாளுவதற்கும் ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க செப்டம்பர் மாதம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், இந்த நிறுவனம் இன்னும் உருவாக்கப்படவில்லை. இந்த செயற்றிட்டம் தொடர்பிலான முன்மொழிவு நிதி அமைச்சின் பொறுப்பில் உள்ளது.

தாமரை கோபுரம் தொடர்பிலான பல விடயங்களை தேசிய கணக்காய்வு அலுவலகம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் இதில் வெளியாகியுள்ளன.

தாமரை கோபுரத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஜனவரி 2012 இல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இது நவம்பர் 2012 முதல் மே 2015 வரை 912 நாட்களில் முடிக்கப்படவிருந்தது. ஆனால் ஒப்பந்த காலம் முடிந்ததும், அக்டோபர் 2017 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது, ஆனால் இந்த ஆண்டு மே 31 க்குள் கூட கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை.

கட்டுமான பணிகளின் தாமதங்கள் காரணமாக, முழு ஒப்பந்தக் கடனையும் இலங்கையால் பெற முடியவில்லை. சீனாவின் எக்ஸிம் வங்கி 67,259,754 அமெரிக்க டொலர்களை மட்டுமே வழங்கியது.

ஆகஸ்ட் 19, 2016 மற்றும் அக்டோபர் 27, 2017 ற்கு இடையில் பெற்றுக்கொண்ட கடனைப் பயன்படுத்தாததற்காக (அதைப் பெற முடியாமல் போனதால்) இலங்கை, 322,984 அமெரிக்க டொலர்களை அல்லது ரூ .49.61 மில்லியன் அபராதமாக செலுத்த வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.