Header Ads



எந்த தேர்­தல்­க­ளிலும் பிக்­கு­களை போட்­டி­யிட அனு­மதிக்கக்கூடாது - கோத்­தா­பயவிடம் கோரிக்கை

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டு­மல்­லாது எதிர்­கா­லத்தில் வேறு எந்த தேர்­தல்­க­ளிலும் பௌத்த பிக்­கு­களை போட்­டி­யிட அனு­மதி வழங்­கக்­கூ­டாது என மிஹிந்­தல ரஜ­மகா விகா­ரையின் பிர­தம விகா­ரா­தி­பதி வல­வ­க­ஹென்­கு­ண­வேவ தம்­மா­ரத்ன தேரர்  ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்­வைத்­துள்ளார்.  

மேலும் ஏனைய கட்சித் தலை­வர்­களும் பௌத்த பிக்­கு­களை தேசிய பட்­டி­ய­லிலும் உள்­வாங்கக் கூடாது என்றும் அவர் தெரி­விக்­கிறார். விகா­ரையில்  இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் கூறு­கையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய பெரும்­பான்மை வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். 

ஆகவே அவர் நாட்டின் தேசி­யத்­தையும் மத விவ­கா­ரங்­க­ளையும்  பாது­காப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை. அது தொடர்­பான சகல விவகாரங்களையும் சிறப்பாக  முன்னெடுப்பார் என தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. யார் போட்டியிடலாம், போட்டியிடக கூடாது என்று சொல்ல ஜனாதிபதிக்கு உரிமையில்லை

    ReplyDelete

Powered by Blogger.