Header Ads



நாளை ஐக்கிய தேசிய, முன்னணியின் முக்கிய கூட்டம்

ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய நாளை (20) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. 

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க் கட்சியில் பங்காற்றுவதா என்பது குறித்து இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது. 

அதேபோல் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இதன் போது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளனர். 

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் நேற்று (18) கூடி கலந்துரையாடியதுடன் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இளைய தலைமைத்துவத்துவம் ஒன்றின் கீழ் புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக எதிர்காலத்தில் செயற்படவேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.