விமானத்தை வெடிக்கச் செய்யவிருப்பதாக அச்சுறுத்திய, இலங்கையருக்கான தண்டனையில் மாற்றம்
அவுஸ்திரேலியாவில் இருந்த மலேசியா நோக்கி 222 பேருடன் பயணித்த விமானம் ஒன்றை வெடிக்கச் செய்யவிருப்பதாக அச்சுறுத்தியமைக்காக, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது.
டெயிலிமெயில் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.
மனோத் மார்க்ஸ் என்ற அவருக்கு 2017ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர் பாரதூரமான மனநல பாதிப்புக்கு உள்ளானவர் என்று நீதிமன்றில் மேன்முறையீட்டு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 ஆண்டுகளில் அவரால் பிணை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment