Header Ads



கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் 'தமிழ் அமுதம்' சஞ்சிகை வெளியீடு (படங்கள்)


கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் ‘தமிழ் அமுதம்’ சஞ்சிகை வெளியீடு அண்மையில் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் அமுதம் சஞ்சிகையின் முதல் பிரதியை அதிபரிடமிருந்தும் சஞ்சிகை ஆசிரியரும் கவிஞருமான யாழ் அஸீமிடமிருந்தும் இலக்கியப்புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொண்டார்.

பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என் .கபூர்தீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் ,நூல் அறிமுகவுரையை பல்துறைக்கலைஞர் அஸ்ரஃப் சிஹாப்தீன்  நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் ரஸீன் அசன்(நளீமி),உப அதிபர் அஷ்ஷெய்க்  எம்.ஏ.எம். மிஹ்ழார் (நளீமி) ,தமிழ்பிரிவின்   பகுதி தலைவர்களான ஏ.பரீத்,ஏ.ஆர்.எம் அஹ்னாப்கான் ஆகியோர் உரைநிகழ்த்தியதுடன் மற்றும் ஆளுநர் சபை உறுப்பினர்கள் ,பழைய மாணவர்கள்,பெற்றோர் ,ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.





No comments

Powered by Blogger.