Header Ads



தலைவராகிறார் சஜித், தலைமை பொறுப்பில் இருந்து விலக ரணில் உடன்பட்டார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச, பெரும்பாலும் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஐதேக/ஐதேமு கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (26) அல்லது நாளை (27) நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தொடர்பிலும் முடிவு செய்யப்படும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

1 comment:

  1. இந்த தோட்டப் பகுதி தம்பி எல்லாத்துலயும் முந்தி மூக்க நொளச்சி மூஞ்சிப் பொத்தகத்துல எழுதுறதும் கையத்தூக்கிறதும். அவரும் அவர்ர மூஞ்சிம் பொத்தகமும்(face book)
    வருவான் ஒருத்தன் கையால வாய பொத்துறத்துக்கு.

    ReplyDelete

Powered by Blogger.