Header Ads



புத்தர் சிலைகளை உடைத்துவிட்டு மீண்டும், குழப்பத்தை ஏற்படுத்த முயற்சியா...?

மாவனெல்லா மற்றும் அதனைச் சுற்றியுள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்துவற்காக ஆயுதங்களில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் லேத் இயந்திரம், மவனெல்லாவின் தனகாமாவில் உள்ள வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட அந்த இயந்திரம் தற்போது பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலையுடைப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வனதவில்லுவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து கடந்த 25 ஆம் திகதி லேத் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனகாமாவில் அமைந்துள்ள குறித்த வீட்டின் உரிமையாளர் நஜுப்தீன் ஃபயாஸும் அந்த சம்பவங்களில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நபரும் பல்லேகேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், லேத் இயந்திரம் மூலம் ஏதேனும் தோட்டாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஆய்வாளர்களிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://ceylontoday.lk/news-more/8608

No comments

Powered by Blogger.