Header Ads



சஜித்திற்கான ஆதரவு அதிகரிக்கிறது - 70 பேரின் கையொப்பத்துடன் மற்றுமொரு கடிதம் தயார்

எதிர்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கும்படி கோரி ஐக்கிய தேசியக் கட்சியினர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எழுத்துமூலக் கோரிக்கை ஒன்றை வழங்கவுள்ளனர்.

இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70 பேர் இவ்வாறு கடிதத்தில் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பு தற்போது சஜித் பிரேமதாஸவுக்கே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.