எங்களுக்கு 2 வது விருப்பு வாக்கு தேவையில்லை - மஹிந்தானந்தவின் திமிர் பேச்சு
கோட்டாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கவிருப்பதாக, ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார். எங்களுக்கு எந்தவோர், இரண்டாவது விருப்பு வாக்கும் தேவையில்லை. ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொருவரின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையில்லை என்றார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, சிறுபான்மையின மக்களின் எந்தவோர் ஆதரவும் தனக்குத் தேவையில்லையென, கோட்டாபய ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றார்.
நாவலப்பிட்டிய மஹிந்தானந்த மன்ற நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (07) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மஹிந்தானந்த அளுத்கமகே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்படியா நல்லது.ஆனால் இந்த பேச்சை மக்கள் நம்பனுமே
ReplyDelete