Header Ads



காஸாவில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் - 26 பலஸ்தீனர்கள் மரணம்


பலஸ்தீனத்தின் காஸாவில் அரிதான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலொன்றாக,  பலஸ்தீன ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்தின் தளபதி பஹா அபு அல்-அத்தாவை இன்று இஸ்ரேல் கொன்றுள்ளது.

இந்நிலையில், பதிலடியாக டெல் அவிவ் உள்ளடங்கலாக இஸ்ரேலிய நகரங்கள் மீது ஆயுததாரிகள் றொக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

இதேவேளை, சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள இஸ்லாமிய ஜிஹாத் அரசியல் தலைவரான அக்ரம் அல்-அஜீரியின் வீட்டை இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலொன்று இலக்கு வைத்ததில், அவரது மகனொருவர் உள்ளடங்கலாக இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் மற்றும் மத்திய இஸ்ரேலில் பாடசாலைகளை மூட உத்தரவிட்டுள்ள இஸ்ரேலின் உள்நாட்டு முன்னரங்குக் கட்டளை, பொதுமக்களை வீடுகளுக்குள் இருக்குமாறும், முக்கியமானது தவிர பணிக்குச் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்திய நிலையில், பொதுப் புகலிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சில றொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஹா அபு அல்-அத்தா தொடர்ச்சியான எல்லை கடந்த தாக்குதல்களை நடத்தியதாகவும், மேலும் பலவற்றை திட்டமிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸா நகரத்தின் ஷெஜையா மாவட்டத்திலுள்ள கட்டடமொன்றை நேற்று அதிகாலையில் சிதறடித்த குண்டு வெடிப்பில் பஹா அபு அல்-அத்தாவின் மனைவியும் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய ஜிஹாத் தெரிவித்துள்ளது. இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் தற்போதைய தாக்குதல்களில் 26 பலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

5 comments:

  1. May Allah Protect His Slaves from the EVILS of OCCUPIERS.

    May Allah Open the EYES of Muslim Rulers over this issue of Palestine for the sake of DEEN.

    ReplyDelete
  2. தீவிர வாதிகள் அழியட்டும் வாழ்க இசுரேல் மிக நல்ல செய்தி

    ReplyDelete
  3. Mr.pilla how to think like as same ealier LTTE period.

    ReplyDelete
  4. Pilla,

    கொல்லப்பட்டவர்கள் எப்படி தீவிரவாதிகளாக முடியும். அவர்கள் அவர்களின் சொந்த நிலத்ததுக்காக, உரிமைக்காக போராடுகிறவர்கள். கொலை செய்யப்பட்ட அவர்கள் அனைவருக்கும் தியாகிகள். யா அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் உனது நிலையான சுவனத்தைக் கொடுப்பாயாக.

    சியோனிஸ இஸ்ரேல் எவ்வளவு காலம் வாழும் என்பதை பார்ப்போமே!

    ReplyDelete
  5. Mr Pilla... IF I say Let Srilankan Army occupy the NORTH lands and kick off the Tamils form that area... You will pass the same comment like above?

    ReplyDelete

Powered by Blogger.