Header Ads



தேர்தல் விதிமுறைகளை மீறிய 18 அமைச்சுக்கள்

தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக 18 அமைச்சுகளுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவாகி இருப்பதாக, பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அரச பணியாளர்கள் இடமாற்றப்பட்டமை, பதவி உயர்வு வழங்கப்பட்டமை, புதிய நியமனங்கள் மற்றும் நிரந்தரமாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, இரண்டு மாகாண சபைகள் மற்றும் 11 உள்ளுராட்சி மன்ற நிர்வாகங்களுக்கு எதிராகவும் தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. Name the violators let the Democratic people know

    ReplyDelete

Powered by Blogger.