Header Ads



வங்காள விரிகுடாவிற்கு 11 ஆம் திகதிவரை கடலுக்கு செல்லாதீர்கள்

வங்காள விரிகுடாவிற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் அதிக வலுவான சூறாவளியாக மாறி வடக்கு நோக்கி வடமேல் திசையூடாக பங்களாதேஷ் கரையை அண்மிக்கவுள்ளது.

இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

1 comment:

  1. இந்த தகவலை நவம்பர் 16 யிலும் சொல்லுங்கள், இல்லாவிட்டால் அவர்களின் வாக்குகள் வீணாகும்.

    ReplyDelete

Powered by Blogger.