Header Ads



தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும், வருவாராயின் மைத்திரியை இணைத்துக்கொள்ள தயார் - UNP

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருடைய தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் வருவாராயின் அவரை இணைத்துக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று -29-செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நல்லாட்சியின் கொள்கைகளில் இருந்து விலகிச்சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருடைய தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் வருவாராயின் அவரை இணைத்துக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

அதற்கென குறிப்பிட்டதொரு காலத்தை வழங்குவதில் தவறில்லை.

ஜனாதிபதி என்ற வகையில் அவரால் நிறைவேற்றப்படாத பணிகளை செய்வதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது. எதிர்வரும் வாரங்களிலேனும் அவரால் பூர்த்தி செய்யப்படாத விடயங்களை செயற்படுத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை, அண்மையில் கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. அந்த விஞ்ஞாபனத்தில் பல்வேறு எழுத்துப்பிழைகளும், பொருட்பிழைகளும் இருக்கின்றன என்றார்.

1 comment:

  1. Why do you need him? Better give that chance to a aspiring young educated guy, who doesn't have any family connections

    ReplyDelete

Powered by Blogger.