Header Ads



தொண்டமான் கோத்தாவுக்கு ஆதரவளித்தாலும், ஆதரவாளர்கள் UNP க்கு வாக்களிப்பார்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் ஆதரவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கினாலும் அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கொத்மலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொண்டமான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவை வழங்கினாலும் தங்களுடைய கட்சிக்கு அது எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனவும் மலையக மக்கள் அன்னப் பறவைக்கு வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர்கள் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்காக நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தொண்டமானின் பேச்சைக் கேட்காமல் மக்கள் அன்னப் பறவைக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.