Header Ads



TNA மிக மோசமாக நடந்துகொண்டுள்ளது, தமிழர் தரப்பே சிங்களவர்களை வேதனைப்படுத்தியுள்ளது

நீராவியடி பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கள பெளத்த மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கம சபையில் தெரிவித்தார். 

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நாடு சிங்கள பெளத்த நாடு. இங்கு தேரர்களின் தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் இன்று பிரச்சினைகள் இல்லை. இந்த நிலம் பிரச்சினையை தேரர்களிடம் விட்டிருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது. இந்த பிரச்சினை வளர தமிழ் தரப்பே காரணம். நீங்கள் பேசாமல் இருந்திருந்தால் ஒரு பிரச்சினை வந்திருக்காது. நீங்கள் செய்த செயலால்  தெற்கில் மக்கள் மத்தியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த தேரர் இறந்தால் அங்கு இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும். 

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது. இங்கு கொழும்பில் சிங்கள மக்களுடன் வாழ்ந்துகொண்டு செயற்படுவது இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவது தவறானது என்றார். 

2 comments:

  1. Hello Mr வெங்காயம் சார், மத தலங்களின் சேட்டை விடுவதை பள்ளிவாசல்களுடன் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இப்படித்தான் வாலை நறுக்கி அனுப்ப படுவீர்கள்.
    கிழக்கு தமிழர்களுக்கு ஆதரவளித்த ஞானசார வந்தபடியால் இவ்வளவுத்துடன் தப்பினீர்கள்


    ReplyDelete
  2. நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தாக்கப்படும் போது முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பும் செய்யாமல், கோழைகளாக ஓடி ஒழிவதால், தமிழர்களையும் அப்படி நிலைத்து விட்டார் இந்த பேமாலி

    ReplyDelete

Powered by Blogger.