Header Ads



சனிக்கிழமை சந்திரிக்கா, நாடு திரும்புகிறார் - ஒருதொகுதி சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு


பிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை சந்திரிக்கா வெளியிட்டிருந்தார்.

இலங்கை வந்தவுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் அமைச்சர் மங்கள சமரவீர தற்போது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், அதற்கமைய எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்வதற்காக முக்கிய பங்கினை சந்திரிக்காவம் மங்களவும் இணைந்து மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.