Header Ads



பக்தாத்தி கொலையுண்டதை ஏற்றுக்கொண்டது IS, சந்தோசப்பட வேண்டாமென எச்சரிக்கை

ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி அமெரிக்காவின் தாக்குதலால் கொல்லப்பட்டாரென சற்றுமுன் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள  ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்தின் பேச்சாளர், குறித்த இயகத்திற்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாரென தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் குறித்த இயக்கத்திற்கு அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி  என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சவுதியை பிறப்பிடமாக கொண்ட இயக்கத்தின் பேச்சாளர் அபூ ஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டதையும் ஐ எஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இயக்கத்தின் தலைமையை கொன்றமைக்காக சந்தோசப்படவேண்டாமென அமெரிக்காவை எச்சரித்துள்ள ஐ எஸ் பேச்சாளர் , மத்திய கிழக்குக்கு வெளியேயும் தமது தாக்குதல்கள் தொடருமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு தமது இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பக்தாதியின் செப்டெம்பர் மாத இறுதி உரையை பின்தொடர்வார்களென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.