BMCH ஐ, வீடியோ எடுத்த 4 முஸ்லிம்கள் கைது
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வீடியோ பண்ணிக் கொண்டிருந்த நான்கு முஸ்லிம் வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்படி மண்டபத்தில் கடமையிலிருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரநாயக்க மண்டபத்தில் கடந்த பத்து தினங்களாக புத்தகக் கண்காட்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அது நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமையோடு முற்றுப்பெற்றது. மேற்படி கைது செய்யப்பட்ட நான்கு பேரும் உட்பிரவேசத்திற்கான அனுமதி கட்டணத்தையும் செலுத்தாது, கடந்த 28 ஆம் திகதி சனிக்கிழமை உட்பிரவேசித்தே மேற்படி வீடியோ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
குறித்த நான்கு சந்தேக நபர்களும் புத்தக கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களோடு உள்நுழைந்து மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட காட்சிகளை வீடியோ பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட மக்கள் இவர்களிடம் கேள்வி எழுப்பியதுடன் இவர்களை வெளியேற விடாது தடுத்து வைத்தே மாநாட்டு மண்டப பொறுப்பிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களிடமிருந்து வீடியோ கெமரா ஒன்றையும் மூன்று கைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தகக் கண்காட்சியை விளம்பரப்படுத்துவதற்காக இவ்வாறு ஈடுபட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் 29 ஆம் திகதி முற்றுப்பெறவுள்ள இறுதிக் கட்டத்தில் இவ்வாறு நடந்து கொண்டமை பொலிஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஏற்கனவே இவர்கள் மீது சந்தேகம் கொண்ட மக்கள் இவர்களிடம் தம்மைப் பதிவுசெய்த காட்சிகளை அழிக்கும்படி கூறியபோது அவர்கள் அழித்து விட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் அக்காட்சிகள் அழிக்கப்படாதிருப்பதைக் கண்டும் மேலும் சந்தேகம் தருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.பத்மசிரி மற்றும் கறுவாத் தோட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாரனாத் சமரகோன் ஆகிய இருவரும் தொடர்ந்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் வெல்லம்பிட்டிய, வெள்ளவத்தை, கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 – 43 வயதுகளுக்கிடைப்பட்டவர்களாவர்.
vidivelli
ReplyDeleteThese young fellows must understand CCTV is fixed and every second an incident is very sharply photographed. Having known all these, if they still are going to seek admission illegally, and do these type of sensitive activities, of course any person has the right to suspect. If they happen to be Muslims, matters are so serious. Our fellows must learn to behave in accordance with the places and circumstances.